06/Jun/2021 07:54:52
ஆலங்குடி, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
ஆலங்குடி அருகேயுள்ள வாணக்கன்காட்டில் சிலர் வீட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக வடகாடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வாணக்கன்காடு வடக்கைச் சேர்ந்த சந்திரமோகன் (51) என்பவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 5 லிட்டர் சாராயம் மற்றும் 800 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர்.