31/May/2021 06:16:33
ஈரோடு, மே: ஈரோடு மாவட்டம், பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சி. கதிரவன் திங்கள்கிழமை கள ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா 2-ஆவது
அலை வேகமாக பரவி வருகிறது.சென்னை,
கோவை போன்ற பெருநகரங் களுக்கு இணையாக
ஈரோடு மாவட்டத்தில் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து
வருகிறது.தொற்று பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட
நிர்வாகம், சுகாதாரத் துறையினர், போர்க்கால அடிப்படையில்
பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரோடு நகரப்பகுதியில் வேகமாக பரவி வந்த தொற்று தற்போது கிராமப்புற பகுதியில்
குடும்பம் குடும்பமாக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதனை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் உள்ள
225 கிராம
ஊராட்சிகளில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கிராம ஊராட்சி செயலாளர்கள் ,சுகாதாரத் துறையினர், போலீசார்,
தன்னார்வலர்கள் ஆகியோர்
அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
100 வீடுகளுக்கு ஒரு பொறுப்பாளர் என்ற அடிப்படையில் இவர்கள் நியமிக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று சளி காய்ச்சல் குறித்த கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை பவானி ஊராட்சி ஒன்றியம், ஓடத்துறை, பி.மேட்டுப்பாளையம் மற்றும் ஆப்பக்கூடல் பேரூராட்சி ஆகிய பகுதிக்குட்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆட்சியர் சி. கதிரவன் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், தன்னார்வலர்கள்
ஆகியோரை தனிமைப்படுத்தப்பட்டுள்ள
நபர்களின் வீடுகளுக்கு சென்று நோய் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு
வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்குமாறு உத்தரவிட்டார்.