17/Nov/2020 11:54:10
தேசிய அளவிலான சிறந்த கற்பித்தலுக்கான ஆசிரியர் தேர்வில் புதுக்கோட்டை, மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியின் கணித ஆசிரியை செல்வமீனா சிறப்பிடம் பெற்றுள்ளார்.
இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன் மற்றும் பெங்களூர் சகோதயா அமைப்பு ஆகியன இணைந்து இணையவழியில் தேசிய அளவில் நடத்திய போட்டியில் பங்கேற்ற 240 ஆசிரியர்களில் 30 பேர் கணிதப் பாடத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் 3 பேருக்கு சிறந்த கற்பித்தலுக்கான பரிசு வழங்கப்பட்டது. இந்த மூவரில் ஒருவராக புதுக்கோட்டை, மௌண்ட் சீயோன் சர்வதேசப் பள்ளியின் கணித ஆசிரியை செல்வமீனா தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து, பள்ளியின் இயக்குநர் ஜோனத்தன் ஜெயபாரதன், இணை இயக்குநர் ஏஞ்சலின் ஜோனத்தன், முதல்வர் ஜலஜா குமாரி ஆகியோர் ஆசிரியை செல்வமீனாவுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.