logo
 கொரோனா சிகிச்சை படுக்கை விவரம் அறிய  24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

கொரோனா சிகிச்சை படுக்கை விவரம் அறிய 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்: ஆட்சியர் தகவல்

10/May/2021 10:21:27

புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டை மாவட்டத்தில் கோவிட் சிகிச்சைக்கு மருத்துவமனைகளில் காலியாகவுள்ள படுக்கை விபரம் குறித்த தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் 24 மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி  வெளியிட்ட தகவல்: புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவமனைகளில் காலியாகவுள்ள படுக்கை விவரம் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் தேவையான தகவல்கள் வழங்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

எனவேமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 24  மணி நேரமும் செயல்படும் சிறப்பு கட்டுப்பாட்டு அறையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் பொதுமக்கள் 04322-1077, 04322-222207 என்ற தொலைபேசி எண்ணிலும், 75388 84840 என்ற அலைபேசி எண்ணிலும்  தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.

Top