logo
அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் : ஈரோடு ஆட்சியரிடம்  பா.ஜ.க.வினர் மனு

அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடி படம் : ஈரோடு ஆட்சியரிடம் பா.ஜ.க.வினர் மனு

30/Oct/2020 10:15:36

ஈரோடு:ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் தெற்கு மாவட்ட தலைவர் சிவசுப்பிரமணியன் அறிவுறுத்தல் படி, எஸ்.சி.எஸ். டி. பிரிவு மாநில துணை தலைவர் வினாயகமூர்த்தி தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர்  ஈரோடு  மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்துக்கு வந்து மனு  அஶித்தனர்.

அந்த மனுவில்  அவர்கள் கூறியிருப்பதாவது: பாரதிய ஜனதா கட்சியின் மாநிலபட்டியல் அணி செயற்குழு கூட்டம்  காஞ்சிபுரம் மாவட்டம் பெரும்புதூரில்  நடைபெற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் முருகன் ஒப்புதலோடு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி தமிழகத்தில் உள்ள  அரசு அலுவலகங்களில் பிரதமர் மோடியின் உருவ படத்தை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இதில், பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட பொதுச் செயலாளர் குணசேகரன், பட்டியல் அணி மாவட்ட தலைவர் அய்யாசாமி,  மாவட்ட செயலாளர் மயில்சாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் திலிப் குமார், அமைப்புசாரா தொழிற்சங்க  மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


       

Top