logo
சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு  புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவி

சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 3 குழந்தைகளுக்கு புதுக்கோட்டை விஜய் மக்கள் இயக்கம் நிதியுதவி

03/Jun/2021 03:31:52

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே அண்மையில் நேரிட்ட  சாலை விபத்தில் பெற்றோரை இழந்து பரிதவித்து வந்த  அவர்களது 3  பெண் குழந்தைக ளுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் நிதியுதவி வழங்கினர்.

அன்னவாசல் அருகே வாதிரிப்பட்டியில் கடந்த சில நாள்களுக்கு முன் நேரிட்ட சாலை விபத்தில் பழனிச்சாமி-மல்லிகா தம்பதியர் உயிரிழந்தனர். இவர்களுக்கு சுவேதா(15), மதுமிதா(13), அபிதா(9)  ஆகிய 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

எதிர்பாராத விதமாக சாலை விபத்தில் பெற்றோரைப் பறிகொடுத்த மூன்று குழந்தைகளும் பரிதவித்தனர். இது குறித்து  சமூக வலைத்தளங்கள் மூலம் தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகளுடன் அன்னவாசல் அருகே வாதிரிப்படி கிராமத்துக்குச் சென்று  பெற்றோரை இழந்த மூன்று பெண் குழந்தைகளுக்கு  ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்து ஆறுதல் தெரிவித்தார்..


..

Top