logo
தனி அமைச்சகம்  உருவாக்க  வலியுறுத்தி ஈரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்

தனி அமைச்சகம் உருவாக்க வலியுறுத்தி ஈரோட்டில் முன்னாள் ராணுவத்தினர் ஆர்ப்பாட்டம்

07/Dec/2020 04:48:48

ஈரோடு, டிச:  தனி அமைச்சகம் உருவாக்க வலியுறுத்தி முன்னாள் ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஈரோடு, காந்திஜி ரோட்டில்  ஜவான் பவன் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் துணைப் படை வீரர்கள் நலக் கூட்டமைப்பின் தலைவர் சுரேஷ் பாபு தலைமை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் பழனியப்பன் பொதுச்செயலாளர் அமல் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு புனர்ஜென்மம் என்ற திட்டத்திற்கு அரசு நிலம் ஒதுக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீட்டு வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். 

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு என்று தனி அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். அவர்களுடைய வாரிசுதாரர்களுக்கு நீட் தேர்வில் இருந்து இட ஒதுக்கீடு செய்ய வேண்டும். பிற மாநிலங்களில் வழங்குவது போல் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடியும் அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Top