logo
புதுக்கோட்டை நகராட்சி உள்பட்ட அம்மா உணவகங்களில்  ஒரு மாதத்திற்கு  விலையில்லா உணவு: செலவை ஏற்றார் அமைச்சர் ரகுபதி

புதுக்கோட்டை நகராட்சி உள்பட்ட அம்மா உணவகங்களில் ஒரு மாதத்திற்கு விலையில்லா உணவு: செலவை ஏற்றார் அமைச்சர் ரகுபதி

01/Jun/2021 10:18:18

புதுக்கோட்டை, ஜூன்: புதுக்கோட்டை நகராட்சி உள்பட்ட அம்மா உணவகங்களில்  ஒரு மாதத்துக்கான செலவை சட்ட அமைச்சர் எஸ். ரகுபதி ஏற்றுக்கொண்டார். இதன் மூலம் பொதுமக்களுக்கு   விலையில்லா உணவு கிடைக்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பாதிப்பால் தளர்வு இல்லா ஊரடங்கு உத்தரவை தமிழக அரசு அறிவித்துள்ளது.. இதனால் நாளடைவில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இருப்பினும் தமிழக முழுவதும் ஏழை எளிய மக்கள் உணவின்றி தவித்து விட கூடாது என்பதற்காக அம்மா உணவகங்கள் வழக்கம் போல செயல்படும் அறிவித்துள்ளது.


புதுக்கோட்டை மாவட்டத்தில் புதுக்கோட்டை நகராட்சி உட்பட்ட இரண்டு அம்மா உணவகங்களில் பழைய பேருந்து நிலையம் மற்றும் ராணியார் அரசு மருத்துவமனை உள்ள அம்மா உணவகங்களில் ஓரு மாதத்திற்கு உணவு கட்டணமில் லாமல் வழங்கப்படும் என்றும் மொத்த செலவைத் தான் ஏற்றுக் கொண்டு ரூபாய் 1, 50,000 (ரூபாய் ஒரு லட்சத்து ஐம்பதா யிரம்) காசோலையை சட்டத்துறை அமைச்சர் . எஸ். ரகுபதி  மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வில், புதுக்கோட்டை திமுக சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா, நகர செயலாளர் . நைனா முகமது, நகராட்சி பொறியாளர் ஜீவா சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் படி கட்டணமில்லாமல் காலை, மதியம் இரண்டு வேளையும் உணவு வழங்கப்படும். தேவை ஏற்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்  என  புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Top