30/May/2021 12:12:56
புதுக்கோட்டை, மே: புதுக்கோட்டையிலுள்ள குடிசை மாற்றுவாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் புதுக்கோட்டை சமத்துவபுரம் அருகே, குடிசை மாற்று வாரியம் சார்பில் ரூ. 120 கோடி மதிப்பில் 1, 972 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. கட்டி முடிக்கப்பட்டு 2 வருடங்கள் ஆகியும் இதுவரை இந்த வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்படவில்லை என்ற புகார் வந்ததைத் தொடர்ந்து புதுக்கோட்டை எம்எல்ஏ முத்து ராஜா அப்பகுதிக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால்
வாரிய அதிகாரிகள். நகராட்சி பொறியாளர் ஜீவா
சுப்பிரமணியன் உள்ளிட்ட
அதிகாரிகள் அப்பகுதியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து எம்எல்ஏ- டாக்டர்
முத்துராஜாவிடம் விளக்கி
கூறியதுடன்
இதுவரை பயனாளிகளிடம் ஒப்படைக்காததற்கான காரணங்களையும் தெரிவித்தனர்.
விளக்கங்களைக் கேட்டறிந்த எம்எல்ஏ முத்துராஜா பணிகளை விரைந்து முடித்து பயனாளிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளி்ன் அறிவுறுத்தினார். இந்த ஆய்வின் போது திமுக நிர்வாகிகள் க. நைனா முகமது, எம்.எம். பாலு உள்பட பலர் உடனிருந்தனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்புகள் பயன்பாட்டுக்கு வராததால் சமூகவிரோதிகள் சிலர் இந்த குடியிருப்பு பகுதியை திறந்த வெளி மது அருந்தும் இடமாகப் பயன்படுத்தி வருவதாகவும், சில வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் சேதப்படுத்தப் பட்டுள்ளன.
பல வீடுகள் பயன்பாட்டுக்கு வராத நிலையிலேயே பழுதடைந்து ஆங்காங்கே
காரை பெயர்ந்து கொட்டத் தொடங்கி விட்டன.
தமிழக அரசு உடனடியாக இதில் தலையிட்டு பழுதடைந்த வீடுகளை சீரமைத்து
பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.