01/Jul/2021 10:02:18
ஈரோடு, ஜூலை: ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் முதல்நாள் நள்ளிரவுில் இருகே மக்கள் இடம் பிடித்து காத்திருந்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க அரசின் உத்தரவின்பேரில், மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை படிப்படையாக குறைந்து வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு தடுப் பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்டத்தில் தற்போது வரை 4 லட்சத்து 22 ஆயிரத்து 994 பேருக்கு தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். தடுப்பூசி போட்டுக் கொள்ள பொதுமக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தடுப்பூசி போடும் முகாம்களில் நள்ளிரவு முதலே குவிய தொடங்கி விடுகின்றனர். நள்ளிரவு ஒரு மணி முதல் வரிசையில் இடம் பிடித்து விடுகின்றனர். இதனால், மக்கள் கூட்டத்தை தவிர்க்கும் வகையிலும், சிரமமின்றி தடுப்பூசி போடுவதற் காகவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுழற்சி முறையில் தடுப்பூசி போடும் பணி கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது.
அதன்படி, ஈரோட்டில் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் தினசரி சுழற்சி முறையில் தலா 20 வார்டுகளில் தடுப்பூசி போடப்பட்டு வந்தது. இதேபோல் புறநகர்ப் பகுதிகளிலும் தடுப்பூசி போட ப்படும் முகாம்கள் அதிகரிக்கப்பட்டிருந்தது.
தடுப்பூசிகள் கையிருப்பு தகுந்தார் போல் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் கடந்த 27, 28- தேதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட வில்லை.இந்நிலையில் கடந்த 29-ஆம் தேதி மாவட்டம் முழுவதும் 105 மையங்களில் 10,500 பேரு க்கு கோவிஷில்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது. புதன்கிழமை தடுப்பூசி கையிருப்பு இல்லாத தால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது.
அன்று இரவே வந்த தடுப்பூசிகள் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, வியாழக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் 80 இடங்களில் கோவிஷில்டு தடுப்பூசி போடும் தொடங்கியது.
வழக்கம்போல் ஒரு சில மையங்களில் முதல் நாள் நள்ளிரவு 1 மணிக்கே வந்து வரிசையில் காத்து நின்று இடம் பிடித்தனர். ஒவ்வொரு மையங்களிலும் முதலில் வந்த 100 பேருக்கு டோக்கன் அடிப்படையில் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டது.
ஈரோடு மாநகர் பகுதியில் 20 வார்டுகளில் சுழற்சி முறையில் தடுப்பூசிகள் பெருமக்களும் போடப்பட்டது. அதேநேரம் சில நாட்களாகவே மாவட்டத் தில் கோவேக்சின் தடுப்பூசிகள் கையிருப்பு இல்லாததால் இரண்டாம் டோஸ் போடும் முறை வந்தவர்கள் போட முடியாமல் தவித்து வருகின்றனர்.