logo
ஈரோட்டில் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில்  முப்பெரும் விழா கொண்டாட்டம்

ஈரோட்டில் மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா கொண்டாட்டம்

14/Feb/2021 05:42:49

ஈரோடு, பிப்:  தேமுதிகவின் 21-ஆவது ஆண்டுவிழா, கொடியேற்று விழா, நலத்திட்ட உதவி வழங்கும் விழா உள்பட முப்பெரும்  விழா  மாநகர மாவட்ட தேமுதிக சார்பில் கொண்டாடப்பட்டது.



தேமுதிக தலைவர் கேப்டன் ஆணைப்படி  ஈரோடு மாநகர் மாவட்டத்தில் 21-ஆம் ஆண்டு   கொடி நாளையொட்டி முப்பெரும் விழா ஈரோடு  மாநகர் மாவட்ட  செயலாளர் எஸ்.ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. மாநில  இளைஞரணி துணைச்செயலாளர் மற்றும் ஈரோடு மாநகர் மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் கோபாலகிருஷ்ணன் கலந்து கொண்டு   ஈரோடு மாநகர் மாவட்டத்துக்குள்பட்ட சூரம்பட்டி பகுதி, சம்பத் நகர் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் கழக கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். 


இதனை தொடர்ந்து கேப்டன் அவர்கள் பூரண நலம்பெற வேண்டி  பாவத்தம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு அன்னாதம் வழங்கப்பட்டது. பின்னர் சூரம்பட்டி பகுதி கழக  அலுவலகத்தை திறந்து வைத்த அவர்கள் சம்பத்நகர் பகுதி கழகம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த கேப்டன் மற்றும்  பிரேமலதா ஆகியோர்  பெயர் பொறிக்கப்பட்ட  கல்வெட்டினை திறந்து வைத்தனர்.


இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் குமாரசாமி,  மாவட்ட கழக பொருளாளர் மற்றும் மேற்கு சட்டமன்ற தொகுதி  பொறுப்பாளர் பாலாஜி, மாவட்டக் கழக துணைச் செயலாளர் மற்றும் கிழக்கு சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் ரங்கராஜ், மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் ராம்.செந்தில்குமார், தாமரைச்செல்வி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் குமார்,  சஞ்சய்குமார்,  பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி,  மாவட்ட கேப்டன் மன்ற செயலாளர்  கிருஷ்ணராஜ், மாணவரணி துணை செயலாளர் சிலம்பரசன், மாவட்ட நிர்வாகி ரம்யா, விக்னேஷ்,  தொழிற்சங்க பொருளாளர் லோகநாதன்.


  சூரம்பட்டி பகுதி கழக பொறுப்பாளர் வேல்முருகன், சம்பத் நகர் பகுதி கழக செயலாளர் சரவணன்,  கருங்கல்பாளையம் பகுதி கழக செயலாளர் மோகனசுந்தரம்,  வீரப்பன்சத்திரம் பகுதி கழக செயலாளர் மாரிமுத்து, ஒன்றிய கழகச் செயலாளர் சரவணகுமார், பகுதி கழக நிர்வாகிகள் ஆறுமுகம்,  ரமேஷ், ஆனந்தன், துளசிமணி, சகுந்தலா,  சண்முகவேல்,  அசோக்குமார்,  பாப்பாத்தி, செல்வமணி, சக்திவேல், கோவிந்தராஜ்,  நாட்ராயன்,  கார்த்திகேயன்.


  ஒன்றிய நிர்வாகிகள் சதாசிவம்,  செந்தில்குமார்,  புருஷோத்தமன்,  ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் வட்டக் கழக செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் பிரகாஷ், மணி, ராஜ்,  சந்தியாராஜ்,  வின்சென்ட்,, பெரிய கருப்பன், வேலுச்சாமி, லட்சுமணன், ராஜா, மணிகண்டன் மற்றும் வட்ட கழக நிர்வாகிகள்,  தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Top