logo
சென்னை அறிவாலயத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை அறிவாலயத்தில் மாமன்னர் மருதுபாண்டியர் உருவப்படத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை

24/Oct/2020 12:48:51

சென்னை: மண்ணைக் காக்கும் போரில் மானமே பெரிது என  மரணத்தைத் துச்சமென நினைத்த வீரமிகு மருது சகோதரர்கள் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்ட நாள் (24.10.2020) இன்று. தாய் மண்ணைக் காக்க தமிழ் மன்னர்களை ஒருங்கிணைத்து, எதிரிகள்- துரோகிகளை எதிர்கொண்டு சிம்மசொப்பனமாக விளங்கிய மருதிருவரின் தியாகத்தைப் போற்றுவோம் என்று சென்னை அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்து மருபாண்டியர் உருவப்பட்டத்துக்கு மலர் தூவி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தினார்.

நிகழ்வில், கட்சியின் பொருளாளர் டி.ஆர். பாலு, ஆலந்தூர் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Top