26/May/2021 12:50:21
புதுக்கோட்டை,மே: கொரானா நோயாளர்கள் கோவிட் -19 சித்த மருத்துவ சிறப்பு மையத்தில் சேர்ந்து பயனடைய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.உம்மல் கதிஜா கேட்டுக் கொண்டுள்ளார்.
இம்மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளர்களின் குறி குணங்களுக்கு ஏற்ப
உள் மருந்துகளாக சித்த மருந்துகள், ஆவி
பிடித்தல் மூச்சுப்பயிற்சி
முத்திரை பயிற்சி ஆகியவைகளை பணி நேரம் மருத்துவர்களின் மேற்பார்வையில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் நோயாளர்களுக்கு குறி குணங்களுக்கு ஏற்ப
பாரம்பரிய சீரான உணவுகள் மூலிகை தேநீர், மூலிகை சூப், மூலிகை தாம்பூலம் மூலிகை கலந்த குடிநீர் ஆகியவைகளை வழங்கி
வருகிறோம்.
நோய் தொற்று ஏற்பட்ட மக்கள்
அச்சம் கொள்ளாமல் சிறப்பு சிகிச்சை மையத்தில்
சேர்ந்து மருத்துவம் மேற்கொண்டு விரைவில் குணமடைய
புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ நிர்வாகம்
நடவடிக்கை எடுத்து வருகிறது.எனவே
நோயாளர்கள் இந்த சிறப்பு மையத்தில் சேர்ந்து
பயனடையுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.