logo
திருவண்ணாமலை மகா தீபம், தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளைக்குள் இறுதி முடிவு

திருவண்ணாமலை மகா தீபம், தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளைக்குள் இறுதி முடிவு

11/Nov/2020 09:27:35

திருவண்ணாமலை மகா தீபம், தேர் திருவிழா நடத்துவது குறித்து நாளைக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தீபம், தேர் திருவிழா நடத்தக் கோரி விஸ்வ இந்து பரிஷத் தலைவர் சக்திவேல் தொடர்ந்த வழக்கில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. 

தீபம், தேர் திருவிழா நடத்துவது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் இன்று ஆலோசனை நடத்துகிறது என்று கோயில் தரப்பு தெரிவித்துள்ளது. கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து நவம்பர் 18-க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல் கோயிலுக்குள்ளேயே தீபத் திருவிழா நடத்தப்படும் என கோயில் நிர்வாகம் தகவல் அளித்துள்ளது 


Top