24/May/2021 10:33:34
சென்னை, மே: ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக அதிமுக செயல்படும் என்றார் முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக
சார்பில் விரலிமலையில் போட்டியிட்டு வெற்றிபெற்ற சட்டமன்ற
உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் மற்றும் கோவில்பட்டி
தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு
இருவரும் சபாநாயகர் முன்னிலையில் திங்கள்கிழமை(மே.24)
தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்று
கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் முன்னாள்
அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நான்காவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகவும்,
தொடர்ந்து 3-ஆவது முறையாக விராலிமலை தொகுதியின்
சட்டமன்ற உறுப்பினராகவும்
என்னை தேர்தந்தெடுத்த மக்களுக்கும் எனது வெற்றிக்காக உழைத்த அஇஅதிமுக தொண்டர்களுக்கும்
நன்றி. ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாகவும், தொகுதியின் பிரச்னைகளை சட்டமன்றத்தில் ஓங்கி ஒலிக்க செய்வேன் என்றார் எம்எல்ஏ விஜயபாஸ்கர்.