24/May/2021 11:56:21
புதுக்கோட்டை, மே: வாய் இல்லாத பிராணிகளுக்கு புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர் தண்ணீருடன் உணவளித்தனர்.
கொரோனா தொற்றால் மனித இனம் தினமும் அவதிப்பட்டு வருகிறது. மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசாங்கம் பல்வேறு உதவிகளைச்செய்து வருகிறது. ஆனால் வாயில்லாத பிராணிகள் தங்களது உணவுக்கு என்ன செய்வது என்ற திக்குத்திசை தெரியாமல் பசியும் பட்டினியுமாக உழன்று வருகின்றன.
இந்நிலையில், அந்த வாயில்லாத பிராணிகளின் பசிப்பிணியைப் போக்கும் வகையில் புதுக்கோட்டைமாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மனித நேயப்பணியைச் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி அருகில் அமைந்துள்ள ஸ்ரீ ஐம்பத்து நான்கு ஆஞ்சநேயர் ஆலயத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குரங்குகள் வசித்து வருகின்றன. கோடை வெயில் மற்றும் கொரோனா ஊரடங்கு காலம் என்பதாலும் அப்பகுதியைச் சுற்றியுள்ள வனப்ப குதியில் குரங்குகளுக்கு தண்ணீரும் உணவும் கிடைக்காத சூழ்நிலை தவித்து வந்தன.
இந்த அவல நிலை குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை மாவட்ட தலைமை விஜய் மக்கள் இயக்கத்தினம் குரங்குகளின் தாகம் தீர்க்கும் வகையில் புதிய தண்ணீர் தொட்டி ஒன்றை புதிதாக அமைத்து குரங்குகளின் பயன்பாடுக்கு தண்ணீர் நிரப்பி வைத்தனர். மேலும் குரங்குகளுக்கு உணவாக வாழைப்பழங்களையும் வழங்கினர். இதையொட்டி ஆஞ்சநேய ருக்கு சிறப்பு அபிஷேகங்களும் செய்யப்பட்டன.
இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தலைவர் ஜெ. பர்வேஸ் கூறுகையில்,எம்மதமும் சம்மதம் என்பதை குறிக்கோளாகக் கொண்டது தளபதி விஜய் மக்கள் இயக்கம், இது மக்களுக்கான இயக்கம் மட்டுமின்றி, வாயில்லா ஜீவன்களையும் பாதுகாக்கும் இயக்கமாகவும் செயல்படுகிறது. ஏழைஎளியவர்களின் துயர் துடைப்பதற்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் நிற்கும் இயக்கமும் இதுதான் என குறிப்பிட்டார்.
புதுக்கோட்டை மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்டத்தலைவர் ஜெ. பர்வேஸ் மற்றும் நிர்வாகிகளின் இந்த மனித நேயச்செயலுக்கு விலங்கு ஆர்வலர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாராட்டுத்தெரிவித்துள்ளனர்.