09/Nov/2020 11:35:49
புதுக்கோட்டை மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பாக விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு பிரசாரம் இன்று நடைபெற்றது.
தீயணைப்பு, மீட்பு பணிகள் துறை மாவட்ட அலுவலர் பானுப்பிரியா தலைமையில் புதுக்கோட்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்தில் நடைபெற்ற பிரசாரத்தினை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், புதுக்கோட்டை நிலைய அலுவலர் மற்றும் பணியாளர்கள் இதில் கலந்து கொண்டு பிரசாரம் புதுக்கோட்டை முக்கிய நகர வீதிகள் வழியாக பிரச்சாரம் செய்தனர்.