20/May/2021 06:06:43
ஈரோடு, மே: தமிழக முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி ரூ.2 லட்சம் நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் நேரில் வழங்கினார்.
தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் சேலத்தில் கொரானா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வை வியாழக்கிழமை முடித்துக் கொண்டு திருப்பூர் செல்லும் வழியில் ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் சுங்கச்சாவடியில் முதல்வரை வரவேற்ற தமிழக வீட்டுவசதித் துறை அமைச்சர் சு.முத்துசாமி முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு முதல் தவணையாக ரூ. 2 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினார். இதில், மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை உள்பட பல்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.