logo
கொளத்தூர் தொகுதி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்  நலத்திட்ட உதவி அளிப்பு

கொளத்தூர் தொகுதி மக்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நலத்திட்ட உதவி அளிப்பு

17/May/2021 01:44:28

 

சென்னை, மே: தமிழக முதல்வரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு..ஸ்டாலின் தனது  கொளத்தூர் தொகுதியில் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக  சார்பில் நிவாரண உதவிகளை (17.5.2021) வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குள்பட்ட வார்டு 69-இல் உள்ள திரு.வி..நகர் மண்டலம் 6-இல் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு தி.மு.. சார்பில் தினந்தோறும் உணவு வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து, அங்குப் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுகளை வழங்கினார்.

  

பின்னர், கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தி.மு.. சார்பில், ஊரடங்குக் காரணமாகத் தவிக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவும் வகையில், அரிசி, எண்ணெய், பருப்பு, உள்ளிட்ட நிவாரணப் பொருட்களையும் சானிடைசர், முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்புப் பொருட்களையும்  முதல்வர் மு..ஸ்டாலின்  வழங்கினார்.

Top