logo
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு விநியோகம்: ஈரோடு மண்டல இணை ஆணையர் ஆய்வு

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் கொரோனா நோயாளிகளுக்கு உணவு விநியோகம்: ஈரோடு மண்டல இணை ஆணையர் ஆய்வு

14/May/2021 08:33:13

ஈரோடு, மே:ஈரோடு மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில்  விநியோகிக்கப்படும்  இலவசமாக உணவு ஈரோட்டில்  தயாரிக்கும் பணியை  மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி ஆய்வு செய்தார்.

  ஈரோடு மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற 27 கோயில்களில் அன்னதான திட்டம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளதால், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அன்னதானத் திட்டம் நடைபெற்று வரும் கோயில்கள் மூலம், அரசு  மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் நோயாளி கள், உதவியாளர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் பயனடையும் வகையில் ஒரு லட்சம் உணவுப் பொட்டலங்கள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

அதன்படி, ஈரோடு மண்டலத்திற்கு உட்பட்ட ஈரோடு மாவட்டத்தில் 3,000 உணவு பொட்டல ங்களும், நாமக்கல் மாவட்டத்தில் 2,000 உணவு பொட்டலங்களும் வழங்க உத்தேசிக்கப்பட் டுள்ளது. இதில்,  ஈரோடு மாவட்டத்தில், அன்னதானத் திட்டம் நடைபெறும் கோயில்கள் மூலம், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு 600 உணவு பொட்டலங்கள், ஈரோடு தலைமை அரசு ஆஸ்பத்திரிக்கு 700 உணவு பொட்டலங்கள், பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு 200 உணவு பொட்டலங்கள், சக்தி அரசு ஆஸ்பத்திரிக்கு 250 உணவு பொட்டலங்கள், கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு 225 உணவு பொட்டலங்கள்,  அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்படும் உணவு மற்றும் ஈரோடு கோயில் களில் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படும்  உணவு தயாரிக்கும் பணி கொங்க லம்மன் கோயில் அன்னதானக் கூடத்தில் நடைபெற்றது. இப்பணியை ஈரோடு மண்டல இணை ஆணையர் மங்கையர்கரசி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அன்னதான திட்டம் நடைபெற்று வரும் 27 கோயில்கள் மூடப்பட்டு இருந்தாலும், வழக்கம்போல் அனைத்துக் கோயில்களிலும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. மொத்தம் 950 பேர் பயனடைந்து வருகின்றனர். 

ஈரோடு மாநகரைப் பொருத்தவரை கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால், சம்பந்தப் பட்ட கோயில்களில் வைத்து உணவு பொட்டலங்களை வழங்காமல், வஉசி பூங்காவில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் வைத்து ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. அதே போல் கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் அரசு ஆஸ்பத்திரிகளுக்கு, அந்தந்த பகுதியில் உள்ள கோயில்களில் உணவு பொட்டலங்கள் தயார் செய்து வழங்கப்படுகிறது.

 இதில் ஈரோடு மாவட்டத்திற்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ள 3,000 உணவு பொட்டலங் களில், 27 கோயில்கள் வழங்கப்பட்டு வரும் 950 உணவு பொட்டலங்கள் போக, மீதம் 2050 உணவு பொட்டலங்கள், சம்பந்தப்பட்ட அரசு ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் இருந்து பெறப்பட்ட தேவையான பயனாளிகளின் பட்டியல் படி, உணவு பொட்டலங்கள் பிரித்து வழங்கப்படுகி றது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வின்போது, உதவி ஆணையர் அன்னக்கொடி, செயல் அலுவலர் ரமணி காந்தன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Top