logo
புதுக்கோட்டை நகராட்சியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகம்: எம்எல்ஏ-முத்துராஜா தொடங்கி வைத்தார்

புதுக்கோட்டை நகராட்சியில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகம்: எம்எல்ஏ-முத்துராஜா தொடங்கி வைத்தார்

13/May/2021 12:04:13

புதுக்கோட்டை, மே:  புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகிக்கும் முகாமை புதுக்கோட்டை தொகுதி எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

 கொரோனா பரவலைத்தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய கபசூர குடிநீர் விநியோகிக்க வேண்டுமென புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராாஜ நகராட்சி நிர்வாகத்தினரிடம் அறிவுறுத்தினார்.

இதையடுத்து  புதுக்கோட்டை நகராட்சி சார்பில்  நகராட்சிக்குட்பட்டமுக்கிய பகுதிகளில் பொதுமக்களுக்கு இன்று முதல் கபசூர குடிநீர் மீண்டும் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது..

அதன்படி  1, 2, 3 வார்டுகளுக்கு -சரவணா தியேட்டர். 1-ஆம் பிரிவு - காமராஜர் சிலை. 2-ஆம் பிரிவு - நகர்மன்றம். 3-ஆம் பிரிவு - தெற்கு ராஜ வீதி பர்சுமியான்  மார்க்கெட் . 4-ஆம் பிரிவு - திலகர் திடல். 5-ஆம் பிரிவு - திருவள்ளுவர் பூங்கா. 6 -ஆம் பிரிவு - டிவிஎஸ் கார்னர். 7-ஆம் பிரிவு - புதிய பேருந்து நிலையம்.  8 -ஆம் பிரிவு - திருகோகர்ணம்,பெரியார் நகர்மற்றும் அனைத்து மார்க்கெட் பகுதிகளில் கபசூர குடிநீர் விநியோகிக்கப்படுகிறது

 புதுக்கோட்டை மீன் மார்கெட் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டை எம்எல்ஏ- டாக்டர் வை. முத்துராஜா பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் விநியோகத்தை தொடங்கி வைத்தார். வருவாய் கோட்டாட்சியர் டெய்சிகுமார்,நகராட்சி ஆணையர்(பொ) ஜீவாசுப்பிரமணியன், நகரச்செயலர் . நைனாமுகமது உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Top