logo
ஈரோட்டில் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக  ஆத்மா மயான நிர்வாகம் அறிவிப்பு

ஈரோட்டில் உயிரிழந்தவர்களைத் தகனம் செய்வதற்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக ஆத்மா மயான நிர்வாகம் அறிவிப்பு

12/May/2021 06:22:54

ஈரோடு மே: ஈரோட்டில்  உயிரிழந்தவர்களை தகனம் செய்வதற்கான  கட்டணம் குறைக்கப்படுவதாக ஆத்மா மயான நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஈரோடு  காவிரிக்கரையில், ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம், மின் மயான அறக்கட்டளை, ஈரோடு மாநகராட்சியுடன் இணைந்து நவீன மின் மயானம் ஆத்மா வை பராமரித்து வருகின்றன.இங்கு உடல் தகனம் செய்ய, 3,500 ரூபாய் கட்டணம் பெறப்படுகிறது. இரவில் தகனம் செய்ய கூடுதல் கட்டணமும், கொரோனா உயிர் இழப்புக்கு சிறப்பு கட்டணமும் வசூலிக்கப்பட்டது.

தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டும், பல்வேறு சூழலில் பண இழப்பு, உயிர் இழப்புகளை மக்கள் சந்திப்பதால், மக்களின் துயரத்தில் பங்கேற்கும் வகையில், அனைத்து வகையான உயிர் இழப்புகளுக்கும் தகனம் செய்வதற்கான  கட்டணம் ரூ.3,500  மட்டும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா, இரவு நேர தகனத்துக்கு கூடுதல் கட்டணத்தை அறக்கட்டளை, நன்கொடையாளர்கள் மூலம் பெற்று ஈடு செய்ய முடிவு செய்துள்ளதாக, ஆத்மா மயான நிர்வாக இயக்குனர் டாக்டர் மகாதேவன், செயலாளர் தனபால்  ஆகியோர்  தெரிவித்துள்ளார்.

Top