logo
முழு ஊரடங்கு: புதுக்கோட்டை  மாவட்ட எல்லைகளில் 9 சோதனை சாவடிகளில் 90 போலீஸார் கண்காணிப்பு

முழு ஊரடங்கு: புதுக்கோட்டை மாவட்ட எல்லைகளில் 9 சோதனை சாவடிகளில் 90 போலீஸார் கண்காணிப்பு

10/May/2021 09:36:36

   முழு ஊரடங்கையொட்டி புதுக்கோட்டை  மாவட்ட எல்லைகளில் உள்ள 9 சோதனை சாவடிகளில் 90 போலீஸார் உள்பட மாவட்டம் முழுவதும் 30 பகுதிகளில்  அமைக்கப்பட்டுள்ள சோதனை தடுப்புகள் உள்பட   425 போலீஸார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தாக்கம் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால் இதனைக் கட்டுப்படுத்த  அரசு போர்க்கால அடிப்படை யில் நடவடிக்கை எடுத்து வருகிறது. எனினும் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவதால்   வரும் 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி திங்கள்கிழமை(மே10) முதல்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட் டுள்ளது.

முழு ஊர் அடங்கும் போது தேவையில்லாமல் வாகனங்களில் வெளியே சுற்றும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்பி  பாலாஜிசரவணன்  எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் மாவட்டம் முழுவதும் ஏடிஎஸ்பி, 6 டிஎஸ்பிக்கள் தலைமையில் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள்  உள்பட மாவட்டம் முழுவதும் 425-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 

புதுக்கோட்டை, பொன்னமராவதி, திருமயம், அறந்தாங்கி, ஆலங்குடி, கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, ஆலங்குடி, மணமேல்குடி உள்பட 30    இடங்களில் தடுப்புகள் அமைத்து 143 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நகர பகுதியில்  எம்ஜிஆர்  சிலை, அண்ணாசிலை , பேருந்து  நிலையம்திருக்கோகர்ணம், மேட்டுப்பட்டி அரிமளம் சாலைமாலையீடு, கட்டியாவயல் அரசு மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பகுதிகளிலும்  போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.   முழுவதும் அப்போது தேவையில்லாமல் வெளியே சுற்றிய ஒரு சிலரை பிடித்து அவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

 

சிலர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதேசமயம் அத்தியாவசிய தேவைக்காக வெளியே செல்பவர்கள் போலீசார் அனுமதித் தனர். அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்லும் வாகனங்கள் தீவிர பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப் பட்டன.   முழு ஊரடங்கை மீறியும் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தேவையில்லாமல்  சுற்றித்திரிந்த இளைஞர்களை  போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Top