logo
அண்ணா நினைவு நாள்: புதுக்கோட்டை. அதிமுக சார்பில்  உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

அண்ணா நினைவு நாள்: புதுக்கோட்டை. அதிமுக சார்பில் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

03/Feb/2021 06:47:59

புதுக்கோட்டை, பிப்: முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி புதுக்கோட்டையிலுள்ள அண்ணா உருவச்சிலைக்கு அதிமுக சார்பில் மாலை  அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில்,  அதிமுக நகரச்செயலரும், வேளாண் விற்பனைக்குழு தலைவருமான க. பாஸ்கர், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் வி.சி. ராமையா, மாவட்ட எம்ஜிஆர் மன்றச்செயலர் எஸ். செல்லத்துரை,மாரிமுத்து,செல்லம், ராமதாஸ், ராஜசேகர், பழக்கடை சேகர், ஊராட்சித்தலைவர் வீ. ராமசாமி, முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் பி. கண்ணன், தியாகராஜன், கிளை நிர்வாகி ஜீவாசெல்வராஜ் உள்பட திரளானோர் பங்கேற்றனர். இதை முன்னிட்டு அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தினர். 



Top