09/May/2021 05:05:40
சென்னை, மே: சென்னையிலுள்ள அண்ணா நூலகத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
அண்ணா நூலகத்தை ஆய்வு செய்தபின் அமைச்சர் அன்பில் பொய்யாமொழி மகேஷ் கூறியதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதியின் நேரடி மேற்பார்வையில் உருவாக்கப்பட்ட ஆசியாவின் மிகப்பெரிய நூலகமான இந்த நூலகத்தில் கடந்த ஆட்சியில் கொண்டு வந்த கல்வி தொலைக்காட்சி நிலையம் இயங்கி வருகிறது.
கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்டது என்பதற்காக கல்வி தொலைக்காட்சி சேவை
நிறுத்தப்படமாட்டாது. மாணவர் களின் நலனைக் கருத்தில் கொண்டு இன்னும் ஆக்கப்பூர்வமான
பல நிகழ்ச்சிகள் சேர்க்கப்பட்டு புதுமையான நிகழ்ச்சிகள் தொடர்ந்து சிறப்பாக
நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் நூலகத்தை மேம்படுத்த தீவிர கவனம் செலுத்தப்படும் என்றார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.