06/May/2021 04:19:14
புதுக்கோட்டை, மே: மறைந்த சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமிக்கு அஞ்சலி செலுத்தி சேவையை நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை மரம் நண்பர்கள் அமைப்பின் சார்பில் பொதுமக்களுக்கு கப சூர குடிநீர், முட்டை, மரக்கன்றுகள் வியாழக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
புதுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற நிகழ்வில் மரம் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த பேராசிரியர் சா.விஸ்வநாதன், பாரதவிலாஸ் கிருஷ்ணமூர்த்தி, கார்த்திக் மெஸ் மூர்த்தி, பழனியப்பா கண்ணன், மொபைல் ராசு, பொறியாளர் ரியாஸ் கான், வி. இறையன்பு, ராம் பாரதி, ராமமூர்த்தி, கார்த்திக் பிரகாஷ், குட்லக் மீரா, முட்டை வழங்கிய ஸ்டார் பிராய்லர் ஷெரீப் ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு கப சூர குடிநீர், கோழிமுட்டை மற்றும் மரக்கன்றுகளையும் வழங்கினர்.
மதுரை பகுதிகளில் கல்குவாரிகளில் நடைபெறும் முறைகேடுகள் தொடர் பாக உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சகாயம் தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுத்தது போன்ற அவரது சேவைகளை இந்நிகழ்வில் பங்கேற்றவர்கள் நினைவு கூர்ந்தனர்.