11/Jan/2021 07:49:37
ஈரோடு-ஜன: சுதந்திரப் போராட்டத்தியாகி திருப்பூர் குமரனின் நினைவு நாளை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
சுதந்திர போராட்ட தியாகி கொடிகாத்த திருப்பூர்குமரன் அவர்களின் நினைவு நாள் தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் சார்பில் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, ஈரோட்டில் திமுக சார்பில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் தெற்கு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி தலைமையில் கொடிகாத்த திருப்பூர் குமரனின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் திமுக மாநில நெசவாளர் அணி செயலாளர் சச்சிதானந்தம், திமுக மாநில கொள்கை பரப்பு அணி இணைச்செயலாளர் வி.சி.சந்திரகுமார், துனைசெயலாளர் செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ப.க.பழனிசாமி, மாவட்ட அவைத்தலைவர் குமார்முருகேஷ், மாவட்ட பொதுகுழு உறுப்பினர் வில்லரசம்பட்டி முருகேஷ், மாநகர செயலாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.