logo
முழு ஊரடங்கு: ஈரோட்டில் காய்கறி- மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

முழு ஊரடங்கு: ஈரோட்டில் காய்கறி- மளிகை கடைகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

01/May/2021 07:50:30

ஈரோடு, மே: முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதை யொட்டி சனிக்கிழமை மளிகை கடைகள்,காய்கறி கடைகளில் வழக்கத்தை விட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

ஈரோடு . . சி பகுதியில் நேதாஜி பெரிய மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், 50 -க்கும் மேற்பட்ட பழ கடைகள் செயல்பட்டு வருகிறது.

இந்த இரவு முழுவதும் மொத்த வியாபாரமும், காலை சில்லறை வியாபாரம் நடைபெறும்.சாதாரண நாட்களில் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வார்கள். இதனால் இந்த பகுதி எப்போதும் பரபரப்பாக காட்சி அளிக்கும்.

இந்நிலையில், நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் சனிக்கிழமை காலை முதலே . .சி. பூங்கா பகுதியில் உள்ள பெரிய மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகளவில் வரத் தொடங்கினர். இதேபோல் மொத்த வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தனர்.

காய்கறி வாங்க வரும் பொதுமக்களுக்கு நுழைவாயிலில் கையில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு உள்ளே அனுமதிக்கின்றனர். குறிப்பாக பெண்கள் அதிக அளவில் வந்து வேண்டிய காய்கறிகளை வாங்கி சென்றனர்.

காய்கறி மார்க்கெட் பகுதியில் மாநகராட்சி சார்பில் நாளை முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.நாளை கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும் நாளை கடைகள் திறந்து இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என ஒலிபெருக்கி மூலம் தகவல் தெரிவித்தனர்.

இதேபோல் மளிகை கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நாளை முழு நேர ஊரடங்கு என்பதால் இன்று ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள காய்கறி கடை, சந்தை மளிகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மீன், கோழி, மட்டன் போன்ற இறைச்சி கடைகள் சனிக்கிழமை செயல்பட அனுமதி இல்லாததால் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

Top