logo
ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக  இதுவரை  900 வழக்குகள் பதிவு

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக இதுவரை 900 வழக்குகள் பதிவு

01/May/2021 05:40:00

ஈரோடு, மே: ஈரோடு மாவட்டத்தில்இரவு நேர ஊரடங்கை மீறியதாக   இதுவரை 900 வழக்குகள் போலீஸாரால்  பதிவு செய்யப்பட்டன.

தமிழகத்தில் கொரோனா 2-ஆவது அலை  மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து இரவு நேர ஊரடங்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரையில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் ஊரடங்கின் போது மாவட்டத்தில் உள்ள 14 சோதனை சாவடிகள் மற்றும் 34 முக்கிய இடங்களில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். விதிமுறைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தங்கதுரை ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

மாவட்டம் முழுவதும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் இரவு முழுவதும் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதில் விதிமுறை களை மீறி வரும் வாகன ஓட்டிகளுக்கும், சாலையில் நடமாடுவோர், கடையை திறந்து வைத்திருந்த உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல்20-ஆம் தேதி இரவு முதல் நேற்று இரவு வரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 900-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள் ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் நேற்று இரவு மட்டும் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஊரடங்கு மீறியதாக  125 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Top