logo
தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணிக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணும் பணிக்கு சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு

01/May/2021 10:57:32

புதுக்கோட்டை, ஏப்: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தேர்தல் நுண் பார்வையாளர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு கணினி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  தேர்தல் பொது பார்வையாளர்கள்  அனிமேஷ்தாஸ்சத்தியநாராயண்தாஸ், ஜெகதீஷ் கே.நாயக்பகத்சரன் பிரதான், பிஸ்வஜித் பிஸ்வால் , மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர் பி. உமாமகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில்(30.4.2021) வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் நிலை அலுவலர்கள், நுண் பார்வையாளர்களுக்கு  சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.


இதில், உடன் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், அறந்தாங்கி சார் ஆட்சியர் ஆனந்த் மோகன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Top