logo
பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.91.87 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவிப்பு

பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.91.87 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவிப்பு

29/Apr/2021 06:45:16

ஈரோடு, ஏப்: பவுல்ட்ரி பார்ம்ஸ் நிறுவனம் நடத்தி ரூ.91.87 லட்சம் மோசடி வழக்கு: குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் அறிவித்துள்ளனர்.

ஈரோடு கொல்லம்பாளையம் அருணாச்சல கவுண்டர் காம்ப்ளக்ஸ் என்ற முகவரியில் வசித்து வந்தவர் மணி.இவர் கே.வி. எம் ஆண்டவர் பவுல்ட்ரி பார்ம்ஸ் என்ற பெயரில் கடந்த 2012-ஆம் ஆண்டு நிறுவனத்தை உரிமையா ளராக இருந்த போது 29 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.91  லட்சத்து 87 ஆயிரம் முதலீடு பெற்று திருப்பி கொடுக்காமல் மோசடி செய்தார்.

இதுகுறித்து முதலீட்டாளர்கள் அளித்த புகாரின் பேரில் ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதுஇதைத்தொடர்ந்து  உரிமையா ளர் மணி தலைமறைவானார். 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8-ஆம் தேதி முதல் கோர்ட்டில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டும், நீண்ட காலமாக வழக்கு நிலுவையில் உள்ளது.

கோவை தமிழ்நாடு முதலீட்டாளர்கள் நலன் பாதுகாப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நாளை(வெள்ளிக்கிழமை)குள் நீதிபதி முன் மணி ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது. தவறும்பட்சத்தில் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக ஆணை பிறப்பிக்கப்படும்.

மணி குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் உடனடியாக ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு 0424–2256700, 94981–78566 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்து உள்ளனர்

Top