logo
ஈரோடு நகரில் சவிதா மேம்பாலத்தின் கீழே சென்ற கண்டெய்னர் லாரி   சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்

ஈரோடு நகரில் சவிதா மேம்பாலத்தின் கீழே சென்ற கண்டெய்னர் லாரி சிக்கியதால் போக்குவரத்து நெரிசல்

29/Apr/2021 08:50:55

ஈரோடு, ஏப்: ஈரோடு நகரில் சவிதா மேம்பாலத்தின் கீழே சென்ற கண்டெய்னர் லாரி   சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரத்திலிருந்து ஒரு கண்டெய்னர் லாரி ஹரியானா மாநிலத்தில் கொண்டு செல்வதற்காக  ஜவுளி பேனல்களை ஏற்றுக்கொண்டு பெருந்துறை சிப்காட் பகுதி நோக்கி கிளம்பி சென்றது.ஈரோடு நாச்சியப்ப வீதி வழியாக வந்த அந்த லாரி சவிதா பேருந்து நிறுத்தத்தை கடந்து மேம்பாலம் வழியாக சென்றபோது. திடீரென லாரியின் மேல் பகுதி மேம்பாலத்தின் அடியில்  சிக்கியது. இதனால் லாரி மேற்கொண்டு நகர முடியாமல் அங்கேயே நின்றது.

ஈரோடு பேருந்து  நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நாச்சியப்பா வீட்டு வழியாக சவிதா பேருந்து நிலையத்தில் திரும்பி செல்வது வழக்கம். திடீரென லாரி மேம்பாலத்தின் கீழ் சிக்கியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் கழித்து ஒருவழியாக லாரி அங்கிருந்து கிளம்பி சென்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Top