logo
ஈரோடு மாவட்டத்தில் 31 போலீஸாருக்கு  இருசக்கர வாகனங்கள் வழங்கல்

ஈரோடு மாவட்டத்தில் 31 போலீஸாருக்கு இருசக்கர வாகனங்கள் வழங்கல்

23/Apr/2021 10:42:49

ஈரோடு, ஏப்: ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் 31 போலீஸாருக்கு   இரு சக்கர வாகனங்கள் வழங்கப்பட்டன.

தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும், விசாரணைகளை விரைந்து மேற்கொள்ள வசதியாக பெண் போலீஸாருக்கு ஸ்கூட்டர் வாகனமும், ஆண் போலீஸாருக்கு  மோட்டார் பைக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, ஈரோடு ஆணைக்கல்பாளையத்தில் உள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற  நிகழ்ச்சியில்  மாவட்ட எஸ்பி தங்கதுரை பங்கேற்று  மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீஸார் 24 பேருக்கு ஸ்கூட்டரும்,  7 ஆண் போலீஸாருக்கு  மோட்டார் பைக்கும்  வழங்கினார்இதில், .டி.எஸ்.பி.கனகேஸ்வரி மற்றும் போலீஸார் கலந்து கொண்டனர்.

Top