23/Feb/2021 06:29:08
புதுக்கோட்டை, பிப்: மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்களின் காத்திருப்பு போராட்டம் இரண்டாவது நாளாக செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோரிக்கைகள்: அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக வேண்டும் முறையான கால முறை ஊதியம் வழங்க வேண்டும். அகவிலைப்படி உடன் கூடிய முறையான ஓய்வூதியம் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
ஓய்வு பெறும்போது ஊழியர்களுக்கு ரூ.10 லட்சமும் உதவியாளர்களுக்கு ரூ.5 லட்சமும் வழங்கிட வேண்டும் ஆகிய மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் உதவியாளர் சங்கம் சார்பில் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் இரண்டாவது நாட்களாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் காத்திருப்பு போராட்டம் மாவட்ட இணைச்செயலாளர் பத்மா தலைமையில் நடைபெற்றது.