logo
சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட வழக்கு: ஈரோட்டில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தினர் விசாரணை

சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட வழக்கு: ஈரோட்டில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தினர் விசாரணை

21/Apr/2021 11:26:09

ஈரோடு, ஏப்: சிறுவர்களை நரபலி கொடுக்க திட்டமிட்ட வழக்கு தொடர்பாக ஈரோட்டில் மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தினர் நேரடியாக விசாரணை நடத்தினர்.

ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி சுந்தரம் வீதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(44). ஜவுளி வியாபாரி. இவரது மனைவி ரஞ்சிதா(37). இவர்களது மகன்கள் தீபக்(15), கிஷாந்த்(6). ராமலிங்கம், அவரது மனைவி ரஞ்சிதா மற்றும், இரண்டாவது மனைவி இந்துமதி(34), தோழி சசி என்ற தனலட்சுமி(38) ஆகியோர் கூட்டு சேர்ந்து தீபக், கிஷாந் இருவரையும் படிக்க விடாமல் வீட்டு வேலைகளை செய்ய வைத்தும், சூடு போட்டும் கொடுமைப்படுத்தியுள்ளனர். இதில், சசி என்ற தனலட்சுமி சிவனாக வேடமிட்டும், ரஞ்சிதா சக்தியாக வேடமிட்டும் இரவு நேரத்தில் பூஜைகள் செய்து வந்துள்ளனர். 

மேலும், சிவன் கடவுளின் சக்தி பெற தீபக், கிஷாந் இருவரையும் நரபலி கொடுத்து விடலாம் என சசி என்ற தனலட்சுமி, ரஞ்சிதாவிடம் கூறியுள்ளார். இதனால் உயிருக்கு பயந்து, தீபக், கிஷாந் இருவரும் புளியம்பட்டியில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு சென்றனர்.

அவர்கள், ஈரோடு தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகாரின்பேரில், 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து, தனலட்சுமி, தீபக் கிஷாந்தின் அம்மா ரஞ்சிதா, அப்பா ராமலிங்கம் என்ற ரமேஷ், இந்துமதி(34), அடைக்கலம் கொடுத்து வந்த சேலம் மாவட்டம் எடப்பாடி இருப்பாளி யை சேர்ந்த மாரியப்பன்(42) ஆகிய 5பேரை நேற்று முன்தினம் தாலுகா போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, ஊடகங்கள் வாயிலாக அறிந்த தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்தது. இதையடுத்து ஆணையத்தின் தலைவர் சரஸ்வதி ரங்கசாமி, வழக்கு தொடர்பாக ஆணையத்தின் உறுப்பினர்கள் ராமராஜ், மல்லிகை செல்வராஜ் ஆகியோர் கொண்ட தனி அமர்வு அமைத்து, வழக்கை விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

 இதன்படி, குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர்கள் நேற்று ஈரோடு ஆட்சியர்  அலுவலகத்தில் பாதிப்புக்குள்ளான சிறுவர்கள், அவர்களது தாத்தா, பாட்டி, மாமா, அத்தை ஆகியோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினர். 

இதைத்தொடர்ந்து  ஈரோடு தாலுகா  காவல்நிலையத்தில் ஏடிஎஸ்பி கனகேஸ்வரி,  ஆய்வாளர்  பாலமுருகனிடமும் வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட எப்.ஐ.ஆர், கோப்புகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இதில் ஏதேனும் விதி மீறல், உரிமைகள் மீறல் இருந்தால் அதற்கான அறிக்கையை ஆணையத்தில் சமர்பிக்கப்பட உள்ளனர். இந்த விசாரணையின்போது, மாவட்ட குழந்தை நல அலகு அலுவலர் பிரியா தேவி, குழந்தைகள் நல அமைப்பு தலைவர் அசோக் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து மாநில குழந்தைகள் உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் ராம்ராஜ் கூறியதாவது:

பாதிக்கப்பட்ட குழந்தைகள் உரிமைகள் மீறல். போலீஸார் மூலம் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு  இருந்தது குறித்தும் குழந்தைகள் நலக்குழுவினர் முறையாக விசாரணை நடத்தினா ர்களா என்பது குறித்து பாதிக்கப்பட்ட குழந்தைகளிடத்தில் நேரடியாக வாக்குமூலம் பெற்றுள் ளோம். அவர்களது பாதுகாவலர்களான தாத்தா, பாட்டி, அத்தை, மாமா ஆகியோரி டம் விசாரணை நடத்தியுள்ளோம். மேலும், குழந்தைகளுக்கு இன்றைக்கு தேவைப்படும் உதவிகள் குறித்தும் கேட்டறிந்துள்ளோம். 

இதனை அறிக்கையாக ஆணையத்தில் சமர்பிப்போம். குழந்தைகளை கொடுமைப்படுத்தி யதாக கைதான 4 பேர், அடைக்கலம் கொடுத்த ஒருவர் என மொத்தம் 5 பேருக்கும் தண்டனை பெற்று போலீசார் தர உரிய சாட்சியங்களை முறையாக நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம். அதுவரை குழந்தைகள் உரிமைகள் ஆணையம் இந்த வழக்கினை தொடர்ந்து விசாரணை நடத்தும் என்றார் அவர.


Top