12/Jan/2021 08:57:09
புதுக்கோட்டை, ஜன: புதுக்கோட்டையில் நடைபெற்ற அனைத்து தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாவட்டக் கிளை தொடக்க விழாவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதுக்கோட்டையில் 10.1.2021-இல் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநிலத் தலைவரும் அஞ்சல் டுடே பத்திரிக்கை ஆசிரியருமான டாக்டர் ஜே.ஜான் எட்வர்டு விசுவாசம் முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத் தலைவர் இரா.தனபால் துணைத்தலைவர் எஸ்.பி.முத்துமணி, செயலாளர் மா.சாமிநாதன், இணைச் செயலாளர்கள் கே.ஆர்.தியாகராஜன். வி நடராஜன், பொருளாளர் ஆர்.எம்.எஸ்.ராஜா, அமைப்புச் செயலாளர் வி.முருகு மாரியப்பன் ஒருங்கிணைப்பாளர் அ.ஜனார்தனம். செய்தி தொடர்பாளர். ஆர்.லெட்சுமணன் ஆகியோர் நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் டாக்டர் ஜே.ஜான் எட்வர்டு விசுவாசம் வாழ்த்து தெரிவித்தார். ஒருங்கிணைப்பாளர் அ.ஜனார்தனம் நன்றி கூறினார்.