29/Jun/2021 06:33:53
கரூர், ஜூன்: கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண பொருள்கள் வழங்கப்பட்டது.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாற்று திறனா ளிகளுக்கு முதல்கட்டமாக வீடு வீடாக சென்று அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் தொகுதி வெங்கமேடு பகுதியில்:நிர்வாகி வி.வி. செந்தில்நாதன் தலைமையில், மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் பாஜக மாநில துணைத்தலை வர் கே. அண்ணாமலை கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகள் குடும்பங்களுக்கு அரிசி, காய் கறி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் முககவசம் அணிந்து கலந்து கொண்டனர்