logo
தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று- 25 பேர் உயிரிழப்பு-கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு

தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று- 25 பேர் உயிரிழப்பு-கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு

15/Apr/2021 09:17:55

தமிழகத்தில் ஒரேநாளில் 7,819 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரேநாளில் கொரோனாவுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9.54 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கொரோனாவால்  12,970 பேர் உயிரிழந்துள்ளனர்.

இச்சூழலில், தமிழகத்தில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக தமிழக தலைமைச்செயலர் ராஜீவ்ரஞ்சன் தலைமையில் நாளை(ஏப்.16) சுகாதாரத்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகளுடன்  ஆலோசனை நடத்தவுள்ளார். அக்கூட்டத்தில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தாண்டவம் ஆடும் கொரோனா.. இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி பாதிப்பு

உலகெங்கும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் நேற்று மட்டும் சுமார் 1.85 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் சுமார் 1.85 லட்சம் பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1,207 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிரா அடுத்த 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவை அமல்படுத்தியுள்ளது. பல மாநிலங்கள் இரவு நேர லாக்டவுனை அமல்படுத்தியுள்ளன. கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருவதால், விரைவில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Top