logo
கொரோனா தொற்று பரவல்: நாடு முழுவதும் சிபிஎஸ்இ – 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

கொரோனா தொற்று பரவல்: நாடு முழுவதும் சிபிஎஸ்இ – 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

14/Apr/2021 07:21:55

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதன் காரணமாக  12-ஆம் வகுப்பு தேர்வு நடத்துவதற்கான சூழல் குறித்து ஜூன்1-ஆம் தேதி ஆய்வு நடத்தி தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், மேலும், நாடு முழுவதும் சிபிஎஸ்இ – CBSE -10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என்றும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண்களை எந்த வகையில் வழங்குவது என்பது பற்றி சிபிஎஸ்இ  முடிவு செய்யும் என்றும், நடுவண் இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE) தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Top