logo
புதுகையில் அம்பேத்கர் மக்கள் இயக்க உயர் நிலைக் குழு கூட்டம்

புதுகையில் அம்பேத்கர் மக்கள் இயக்க உயர் நிலைக் குழு கூட்டம்

16/Nov/2020 04:58:14

புதுக்கோட்டை மின்வாரிய அலுவலகம் எதிரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தலைவர் இல. முருகமுத்து தலைமையில் நடைபெற்ற உயர் நிலைக் குழு கூட்டத்தில் வை.பாலசுந்தரத் தின் முதலாண்டு நினைநாளை வரும் 6-ஆம் அன்று  இயக்கத் தலைவர் வை. ராமலிங் கம் தலைமையில் சென்னையில் சிறப்பாக நடத்துவது.

அந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், அனைத்துக் கட்சி, சமுதாய தலைவர்கள் கலந்து கொள்ள ஏற்பாடு செய்வது என்பன உள்ளிட்ட பலவேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில், மாநில பொதுச் செயலாளர் சிவ.முருகேசன், மாநிலச்செயலாளர் மெய்யர், மாவட்டச் செயலாளர் தங்கவேலு, பொருளாளர் பழனிச்சாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Top