08/Apr/2021 10:09:43
புதுக்கோட்டை, ஏப்ரல்: புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலகத்தில் வனத்துறையில் பணியாற்றும் பெண் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின் பேரில் பணியிடத்தில் வனத்துறை பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் தடை மற்றும் குறைதீர்ப்பு. சட்டம்- 2013 குறித்து விளக்க விழிப்புணர்வு கூட்டத்தில் பொன்னமராவதி வனச்சரக அலுவலர் மேரிலான்சி பங்கேற்று பேசுகையில், பணிபுரியும் இடத்தில் பெண்கள் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது.
பாலியல் தொந்தரவுகள் துன்புறுத்துதல் போன்ற சம்பவங்களில் இருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது குறித்தும் அதற்கான சட்டம் மற்றும் விதிகள் குறித்து விளக்கமளித் தார். இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் புதுக்கோட்டை வனக் கோட்டத்தில் பணிபுரியும் அனைத்து அலுவலக பணியாளர்கள் உள்பட 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.