01/Jan/2021 11:57:52
புதுக்கோட்டை, டிச: இந்திய மாணவர் சங்கத்தின் 50 -ஆவது ஆண்டு நிறைவு பொன்விழாவை முன்னிட்டு புதுக்கோட்டையில் கொடியேற்றுவிழா நடைபெற்றது.
புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில நடைபெற்ற கொடியேற்று விழாவிற்கு மாணவர் சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.கார்த்திகாதேவி தலைமை வகித்தார். சங்கத்தின் கொடியை மாநிலக்குழு உறுப்பினர் ஏ.எஸ்.ஓவியா ஏற்றி வைத்தார். தமுஎகச மாவட்ட நிர்வாகிகள் எஸ்.இளங்கோ, புதுகை செல்வா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.ஜனார்த்தனன் நிறைவுரையாற்றினார்.
முன்னதாக அ.சந்தோஷ் வரவேற்றார். எஸ்.வைஷ்ணவி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்