logo
இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன்  வாக்கு சேகரித்து பிரசாரம்

இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் வாக்கு சேகரித்து பிரசாரம்

02/Apr/2021 09:08:03

ஈரோடு, ஏப்: கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகியபள்ளிவாசல்களில் தொழுகைமுடிந்துவெளியேறிய இஸ்லாமியர்களிடம் அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். 

ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டமன்றதொகுதியில் 9-ஆவது முறையாக போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் பள்ளிக்கல்வித் துறைஅமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் வேட்பு மனு தாக்கல் செய்தது முதல் டி.என்.பாளையம் நம்பியூர் மற்றும் கோபிசெட்டிபாளையம் ஒன்றியங்களில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாள் தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் வாக்காளர்களிடம் பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகிறார்.

 ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஒன்றியங்கள் என கணக்கிட்டு ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று வீடுவீடாகவும் திறந்த வாகனத்தில் சென்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில்,இஸ்லாமியர்கள் தொழுகைக்கு கூடுகிற பள்ளிவாசல்களில் வெள்ளிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.  கோபிசெட்டிபாளையம் மற்றும் நல்லகவுண்டம்பாளையம் ஆகியபகுதிகளில் அமைந்துள்ள பள்ளிவாசல்களின் முன்பு வேட்பாளர் செங்கோட்டையன் தொழுகை முடிந்து வெளியே வந்த இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகித்து வாக்கு சேகரித்தார். 

மேலும் இஸ்லாமியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும் வாக்குறுதி வழங்கினார். நல்லகவுண்டம்பாளைத்தில் உள்ள பள்ளிவாசலில் வாக்கு சேகரித்தஅமைச்சர் செங்கோட்டைனிடம் இஸ்லாமியர்கள் அவருக்கு வாக்களிப்பதாக உறுதியளித்தனர். மேலும் அமைச்சர் வெற்றி பெற வேண்டி தொழுகை நடத்தினர்.

Top