01/Apr/2021 06:05:43
சென்னை:ஓட்டுக்கு பணம் கொடுப்பவன் பாவி, பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுபவன் தேசத் துரோகி என சீமான் ஆவேசத்துடன் கூறினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மோகனசுந்தரியை ஆதரித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டார்.அப்போது அவர் பேசுகையில், பணம் இருந்தால்போது, பதவிக்கு வந்துவிடலாம் என்று திராவிட கட்சிகள் நினைக்கின்றன.
திராவிட கட்சிகள் 50 ஆண்டுகளாக செயல்படுத்த முடியாததை வரக்கூடிய 5 ஆண்டுகளில் செய்து விடுவார்கள் என்று எப்படி நம்புகிறீர்கள் என்று சீமான் கேள்வி எழுப்பினார்.