logo
பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்.

11/Jun/2021 07:29:09

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள வடகாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை அண்மைகாலமாக கடுமையாக அதிகரித்து வருகிறது.இதனால், பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்காளாகி வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அறிவித்தார். தொடர்ந்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வடகாடு ஊராட்சித் தலைவர் எஸ்.மணிகண்டன், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் குமாரவேல், பாலு உள்ளிட்டோர் பங்கேற்று, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Top