logo
ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய  6பேர் கைது

ஈரோடு அருகே பணம் வைத்து சூதாடிய 6பேர் கைது

18/Nov/2020 10:33:29

ஈரோடு: ஈரோடு மாவட்டம், அந்தியூர் ,நகலூா் காலனி பெரியபாறை பகுதியில் சிலர் பணம் வைத்து சீட்டாட்டம் விளையாடி வருவதாக போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த 6 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்தியூர் நகலூர் புதூரை சேர்ந்த ராமேஸ்வரன்(39), சேகர்(25), ரவிக்குமார்(31), கதிரேசன்(24), சின்னகண்ணன்(52), நல்லசாமி(37) ஆகிய 6பேர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ.1,230 ரொக்கம் மற்றும் சீட்டுக்கட்டுக்களை பறிமுதல் செய்தனர். 


Top