01/Apr/2021 04:30:09
புதுக்கோட்டை, ஏப்: மாநில நிர்வாகிக்கு மேலதிகாரிகளால் வழங்கப்பட்ட மெமோவைப் திரும்பப்பெற வேண்டுமென தமிழ்நாடு அங்கன் வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டையில் வட்டார தலைவர் டி .சாந்தி தலைமையில் நடைபெற்றதமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்கள் சங்கத்தின் வட்டார விரிவடைந்த செயற்குழுகூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பிற தீர்மானங்கள்: சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் தோழர் டி .டெய்சிக்கு மேலதிகாரிகளால் வழங்கப்பட்ட குறிப்பாணை(மெமோ)யை திரும்பப் பெற வேண்டும். அதுவரை போஷான் அபியான் பணிகளை புறக்கணிப்பது. அங்கன்வாடி பணியாளர்கள் தேர்தல் பணியில் இருப்பதால் தேர்தல் முடியும் வரை கூடுதல் பணிகளை பார்க்க சொல்லி கட்டாயப்படுத்த கூடாது. தேர்தல் முடிந்தவுடன் பிஎல்ஓ (BLO) பணியில் இருந்து அனைத்து பணியாளர்களையும் விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வட்டார செயலாளர் எஸ். மகேஸ்வரி சென்ற ஆண்டில் நடைபெற்ற பணிகள் பற்றி பேசினார். மாவட்ட செயலாளர் கோ.பச்சையம்மாள், மாவட்ட இணைச்செயலாளர் டி .பத்மா, கந்தர்வகோட்டை வட்டார தலைவர் என் .மணிமேகலை, திருவரங்குளம் வட்டார நிர்வாகிகள் சித்ரா, செல்வி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக வட்டார பொருளாளர் டி. சுலோச்சனா நன்றி கூறினார்.