30/Mar/2021 11:17:19
புதுக்கோட்டை மாவட்டம், தென்னங்குடி அருள்மிகு முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனி தேரோட்டம் நடைபெற்றது.
புதுக்கோட்டை திருக்கோயிலைச் சார்ந்த இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 20- ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு அம்மன் திருவீதிஉலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வாக ஒன்பதாம் நாளான திங்கள்கிழமை தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது.
இந்த தேர் திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு தேரில் வைத்து சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர்.வலம் வந்த தேரில் வீற்றிருந்த அருள்மிகு முத்துமாரியம்மன் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருள் பாலித்தார்.