logo
திருமயம் தொகுதியில் வீரமுத்தரையர் முன்னேற்றக்கழகத்தலைவர் கே.கே.செல்வகுமார் தீவிர பிரசாரம்

திருமயம் தொகுதியில் வீரமுத்தரையர் முன்னேற்றக்கழகத்தலைவர் கே.கே.செல்வகுமார் தீவிர பிரசாரம்

30/Mar/2021 10:23:21

புதுக்கோட்டை, மார்ச்: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் வீரமுத்தரையர் முன்னேற்றக்கழகத் தலைவர் கே.கே. செல்வகுமார்  தொகுதி முழுவதும் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் பரவலாக வாழும் முத்தரையர் களுக்கு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள்  வீர முத்தரையர் முன்னேற்றக்கழகத்துக்கு உரிய அங்கீகாரம் அளித்து  தொகுதிகள் ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்து துரோகம் செய்து விட்டாதாக  கே.கே. செல்வகுமார் குற்றம்சாட்டினார்.

இதையடுத்து  வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில்  தனது இயக்கம் சுயேச்சையாக களமிரங்கப் போவதாகவும் அறிவித்தார். அதன்படி, திருமயம் சட்டமன்ற தொகுதியில் கே.கே. செல்வகுமார் வேட்பு மனு தாக்கல் செய்தார். இவர் போட்டியிடுவதன் காரணமாக இரண்டு திராவிடக்கட்சிகளிடமும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், திருமயம் தொகுதியில் தனது கட்சி சார்பில் களமிரங்கியுள்ள கே.கே. செல்வகுமார் தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் செய்து  தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். தனது பிரசாரத்தின்போது அவர் பேசுகையில்  இரண்டு திராவிடக்கட்சிகளையும் எதிர்த்து போட்டியிடுவதாகவும்,  இந்த முறை  சட்டமன்றத்துக்குச்செல்ல வெற்றி வாய்ப்பை  தரவேண்டும், அப்படி வாய்ப்பளித்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளையும் முன்னின்று தீர்த்து வைப்பேன்.

கோரிக்கைகளை நிறைவேறாவிட்டால் களத்தில் இறங்கி போராடியாவது நிறைவேற்றச் செய்வேன். எனவே, என்க்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என குறிப்பிட்டார்.

Top