03/Dec/2020 09:42:24
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை முதல் மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. ஈரோடு மாநகரில் அதிகாலை 4 மணி முதல் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இதனால் இன்று வேலைக்கு செல்லும் பணியாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதேபோல் அந்தியூர்,சத்யமங்கலம், கொடுமுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிகாலையில் இருந்தே சாரல் மழை பெய்து வருகிறது.